இந்தியா
சொந்த தொகுதியில் படுதோல்வி ; கொளத்தூரில் முக ஸ்டாலின்,சேகர் பாபு கண்ணீர் விட்ட சம்பவம்!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக என்ற இருபெரும் திராவிட கட்சிகளே தமிழகத்தின் அரியணையில் மாறிமாறி அமர்ந்த நிலையில், இம்முறை இவ்விரண்டு கட்சிகளையும் ஓரங்கட்டிவிட்டு தனிப்பெரும் கட்சியாக விஜயின் தவெக வரலாறு படைத்துள்ளது
சொந்த தொகுதி கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வியடைந்ததை அடுத்து, வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் சென்றார்.
அவருடன் சேகர்பாபுவும் இருந்தார். அப்போது தொண்டர்கள் அழுததைக் கண்டு சேகர்பாபுவும் கண் கலங்கினார்.
ஸ்டாலின் தொண்டர்களை அழவேண்டாம் என ஆறுதல் கூறினார். முக ஸ்டாலின்,சேகர் பாபு கண்ணீர் விட்ட காட்சி தற்போது வைரலாகி வருகிறது.



