இந்தியா

கோவை சிறுமி கொலைச் சம்பவம்: பெற்றோருக்கு முதல்வர் விஜய் ஆறுதல்

Desktop Image Mobile Image

இந்தியா – தமிழ்நாட்டின் கோவையை அடுத்த சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமிக்கு நேர்ந்த இந்த துயர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய மனிதநேயமற்ற குற்றச்செயல்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், சம்பந்தப்பட்டவர்களுக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, உயிரிழந்த சிறுமியின் பெற்றோருடன் முதல்வர் விஜய் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

 

 

அப்போது குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததுடன், “நான் இருக்கேன்… கவலைப்படாதீங்க” என பெற்றோருக்கு ஆறுதல் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அமைச்சர்கள் விஜய் தமிழன் மற்றும் சம்பத் குமார் ஆகியோர் சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து 7 லட்சம் ரூபாய் நிதி உதவிக்கான காசோலையை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Back to top button