வவுனியாஇலங்கைவடக்கு மாகாணம்
வவுனியாவில் போர் வெற்றிநாள் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு

வவுனியாவில் சிங்கள மக்களால் போர் வெற்றிநாள் நிகழ்வுகள் இன்று நினைவு கூரப்பட்டன.
வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ சிலைக்கு இதன்போது சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பௌத்த மதகுருமார்கள் மற்றும் சிங்கள மக்கள் கலந்துகொண்டனர்.
போர் வெற்றியை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், பங்கேற்றவர்கள் அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





