வவுனியாஇலங்கைவடக்கு மாகாணம்

வவுனியா புனித அந்தோனியார் ஆலய திருவிழா சிறப்பாக நடைபெற்றது

Desktop Image Mobile Image

வவுனியா நகரில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (13) பக்தி பூர்வமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு காலை நடைபெற்ற திருப்பலியில் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் விசேட ஆராதனைகளும், புனித அந்தோனியாரின் திருச்சுரூப பவனியும் இடம்பெற்றது.

 

 

வடக்கு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்திருந்த கத்தோலிக்க பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி புனிதரின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டனர்.

திருவிழாவை முன்னிட்டு ஆலய வளாகம் வண்ணக் கொடிகள் மற்றும் மின் அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கான விசேட ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

 

 

மத நல்லிணக்கம் மற்றும் ஆன்மீக ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இத்திருவிழா, பக்தர்களின் பெரும் திரளான பங்கேற்புடன் நிறைவடைந்தது.

வவுனியா புனித அந்தோனியார் ஆலய திருவிழா சிறப்பாக நடைபெற்றது வவுனியா புனித அந்தோனியார் ஆலய திருவிழா சிறப்பாக நடைபெற்றது வவுனியா புனித அந்தோனியார் ஆலய திருவிழா சிறப்பாக நடைபெற்றதுவவுனியா புனித அந்தோனியார் ஆலய திருவிழா சிறப்பாக நடைபெற்றது வவுனியா புனித அந்தோனியார் ஆலய திருவிழா சிறப்பாக நடைபெற்றது

Related Articles

Back to top button