வவுனியாஇலங்கைசெய்திகள்வடக்கு மாகாணம்

வவுனியாவில் பொலிஸார் முன்னெடுத்த இரத்ததான முகாம்

Desktop Image Mobile Image

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, வவுனியா சமுதாயப் பொலிஸ் பிரிவினரால் இரத்ததான முகாம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த விசேட இரத்ததான நிகழ்வு, சமுதாயப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரியரட்ண தலைமையில் நடைபெற்றது.

இரத்ததான முகாமில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்று தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகளுக்குத் தேவையான குருதியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

முகாமில் சேகரிக்கப்பட்ட குருதி, வவுனியா இரத்த வங்கியிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டு, வைத்தியசாலையின் அவசர மருத்துவத் தேவைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

சமூகத்தின் அவசர தேவையை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இந்த இரத்ததான முகாமில் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button