
யாழ்ப்பாணத்தில் இருந்து சுற்றுலாவுக்காக சென்ற கார் ஒன்று, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த இருவர் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளனர்.
இந்த விபத்து இன்று (02) பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் செனன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கம் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பின்னர் வீதியை விட்டு விலகிய கார், சுமார் 10 அடி ஆழமான பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து இடம்பெற்ற வேளையில் காரில் இருவர் பயணித்துள்ளனர். எனினும், அவர்கள் இருவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படாத நிலையில் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
விபத்தில் கார் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஹட்டன் வலய தலைமை பொலிஸ் அதிகாரி பிரதீப் வீரசேகரவின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




