கிளிநொச்சிஇலங்கைசெய்திகள்வடக்கு மாகாணம்
கிளிநொச்சி ஏ9 வீதியில் கார் மோதி துவிச்சக்கர வண்டி சாரதி காயம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி, விளாவோடை பகுதியில் இன்று (02) இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
ஏ9 வீதியூடாக துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் மீது, கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வேகமாக பயணித்ததாக கூறப்படும் மகிழுந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த துவிச்சக்கர வண்டி சாரதி மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, விபத்தில் மகிழுந்தின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





