
2026ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
பெறுபேறுகள் வெளியான பின்னர், மாணவர்கள் இணையத்தளம் வழியாக தங்களது பெறுபேறுகளை உடனடியாக சரிபார்த்துக்கொள்ள முடியும். இதற்காக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் 9ஆம் திகதி நாடு முழுவதும் நடைபெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து பெறுபேறுகளை எதிர்பார்த்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் காத்திருந்தனர்.
இந்நிலையில், பெறுபேறுகள் விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.




