யாழ்ப்பாணம்இலங்கைசெய்திகள்வடக்கு மாகாணம்
புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவன் சாதனை: தமிழ்மொழியில் அகில இலங்கை முதலிடம்

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சு. சபின் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவன் 188 புள்ளிகளைப் பெற்று இந்த சிறப்பான சாதனையை பதிவு செய்துள்ளார்.
மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் சு. சபினின் இந்த சாதனை பாடசாலை மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
மாணவனின் சிறப்பான பெறுபேற்றை தொடர்ந்து அவரது குடும்பத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சிங்கள மொழி மூலம் புலமைப்பரிசில் பரீட்சையில் பெறப்பட்ட அதிகூடிய புள்ளியாக 193 புள்ளிகள் பதிவாகியுள்ளதுடன், அது குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.




