கோட்டை நீதிமன்றத்தில் 500 ரூபாய் இலஞ்சம் கோரியதாக அலுவலக உதவியாளர் கைது

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தீர்ப்பின் பிரதியை வழங்குவதற்காக 500 ரூபாய் இலஞ்சம் கோரிப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் அலுவலக உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கோட்டை நீதிவான் நீதிமன்றில் நிலுவையில் இருந்த பணத்தகராறு தொடர்பான வழக்கொன்றில் இணக்கப்பாடு ஏற்பட்ட பின்னர், அந்த வழக்கின் தீர்ப்புப் பிரதியை வழங்குவதற்காக கடந்த ஜூன் 30ஆம் திகதி 500 ரூபாய் பணத்தை இலஞ்சமாக கோரியதாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபர் நேற்று 16ஆம் திகதி கோட்டை நீதிவான் நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபரை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!




