விஜய் முதலமைச்சரானதில் மகிழ்ச்சி – ஜேசன் சஞ்சய் பகிர்ந்த தகவல்

இயக்குநராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாகும் சிக்மா திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள முதல் திரைப்படம் என்பதால், சிக்மா திரைப்படம் மீது ரசிகர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்ற திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜேசன் சஞ்சய், தனது தந்தை விஜய் தொடர்பில் பல்வேறு விடயங்களை பகிர்ந்துள்ளார்.
விஜய் முதலமைச்சராக இருப்பதில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த ஜேசன் சஞ்சய், சிக்மா திரைப்படம் வெளியாகும் நாளுக்காக தனது தந்தை காத்திருப்பதாக கூறியுள்ளார்.
அதேவேளை, திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தனது தந்தை கலந்துகொள்ள மாட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். திரைப்படத்திற்கான விளம்பரங்கள் தனது தந்தையை முன்னிலைப்படுத்தாமல், படத்தைப் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சராக விஜய்க்கு தற்போது பல்வேறு பொறுப்புகள் இருப்பதாக தெரிவித்த ஜேசன் சஞ்சய், தான் உருவாக்கியுள்ள படத்தைப் பார்க்க அவர் மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது தந்தையிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்பும் ஒரு விடயம் குறித்து கேட்கப்பட்டபோது, நேரம் தவறாமையை கற்றுக்கொள்ள விரும்புவதாக ஜேசன் சஞ்சய் பதிலளித்துள்ளார்.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!




