
ஹங்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜல்தர பகுதியில் களனி கங்கையிலிருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஹங்வெல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (11) மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் தொடர்பான அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!
சிறிய அறிவுப் பரிசோதனை: சார்பியல் கோட்பாட்டுடன் தொடர்புடைய விஞ்ஞானி யார்?



