இலங்கை
சிறுநீரக சிகிச்சைக்காக பொதுமக்களிடம் உதவி கோரிய சிவாஜிலிங்கம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை முன்னாள் நகர பிதாவுமான எம்.கே. சிவாஜிலிங்கம், தனது சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான நிதி உதவியை பொதுமக்களிடம் கோரியுள்ளார்.
ஊடகங்கள் ஊடாக உருக்கமான வேண்டுகோளை முன்வைத்த அவர், தங்களால் இயன்றளவில் நிதியுதவி வழங்கி தனது உயிரைக் காப்பாற்ற உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக பெருமளவு நிதி தேவைப்படுவதால், அதற்கான ஆதரவை பொதுமக்களிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




