சொனல் தினுஷின் ஆட்டத்தை பாராட்டிய கௌதம் கம்பீர்

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் இளம் வீரர் சொனல் தினுஷ சிறப்பாக விளையாடியதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கௌதம் கம்பீர் தனது X தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் குணம், பொறுமை மற்றும் மன வலிமை ஆகியவை மிகவும் முக்கியமானவை எனக் குறிப்பிட்டுள்ள கௌதம் கம்பீர், இந்திய வீரர்கள் இந்த பண்புகளை சிறப்பாக வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை அணியின் இளம் வீரர் சொனல் தினுஷ மிகவும் அற்புதமாக விளையாடியதாகவும் அவர் தனது பதிவில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அண்மையில் நிறைவடைந்த இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
எனினும், தொடரில் சொனல் தினுஷ வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணியால் தொடரை முழுமையாக கைப்பற்ற முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 100 மற்றும் 84 ஓட்டங்களை பெற்ற சொனல் தினுஷ, இரண்டாவது டெஸ்டில் 103 மற்றும் 133 ஓட்டங்களை குவித்திருந்தார்.
இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் தொடரில் இலங்கை அணியின் முக்கிய வீரராக சொனல் தினுஷ கவனத்தை ஈர்த்துள்ளார்.




