
உத்தரப் பிரதேசத்தில் கணவர் மற்றும் காதலன் ஆகிய இருவருடனும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ விரும்புவதாக பெண் ஒருவர் தெரிவித்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் பேசுபொருளாகியுள்ளது.
சீதாபூர் மாவட்டம் மஹ்மூதாபாத்தைச் சேர்ந்த சுபம் வர்மா மற்றும் அஞ்சு தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நிதின் என்பவருடன் அஞ்சுவுக்கு ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.
கணவர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பங்களில் நிதின் அங்கு வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த விடயம் சுபம் வர்மாவுக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து கணவன் மற்றும் மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
கணவரின் எதிர்ப்பையும் மீறி நிதினை வீட்டிற்கு அழைத்து வந்ததால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து சுபம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் சுபம், அஞ்சு மற்றும் நிதின் ஆகிய மூவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
பேச்சுவார்த்தையின்போது சுபம், அஞ்சு தன்னுடன் அல்லது நிதினுடன் மட்டுமே வாழ வேண்டும் என்றும், இருவருடனும் சேர்ந்து வாழ்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அஞ்சு தனது கணவரையும் காதலனையும் இருவரையும் விட்டுக்கொடுக்க முடியாது என்றும், இருவருடனும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மூவருக்கும் இடையிலான பிரச்சினையை தீர்க்க பொலிஸார் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
எனினும், பேச்சுவார்த்தை மூலம் எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை.
அஞ்சு தனது முடிவில் உறுதியாக இருந்ததாகவும், சுபம் மற்றும் நிதின் ஆகிய இருவருடனும் தொடர்ந்து வாழ விரும்புவதாக வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இறுதியில் உடன்பாடு ஏற்படாததால், பொலிஸார் மூவரையும் அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கணவர், காதலன் என இருவருடனும் ஒரே வீட்டில் வாழ விரும்புவதாக பெண் ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்த இந்த சம்பவம் மஹ்மூதாபாத் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




