
பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியின் 7ஆவது கிலோமீற்றர் பகுதியில் தனியார் பேருந்தொன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (10) அதிகாலை சுமார் 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மெதிரிகிரியவில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்தே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த 22 பேரும் ஹபரணை மற்றும் ஹிங்குராங்கொடை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருவதால், அந்த பகுதி விபத்துக்கள் அதிகம் இடம்பெறும் இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மின்னேரியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




