இலங்கை

வெள்ளவத்தையில் வாய்த்தர்க்கம் விபரீதம் – நண்பரின் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

Desktop Image Mobile Image

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில், பொல்லால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (09) இரவு வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெட்ரிகா வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, உயிரிழந்த நபருக்கும் அவரது வீட்டில் தங்கியிருந்த நண்பருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறே இந்த தாக்குதல் சம்பவத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.

 

 

வாக்குவாதம் முற்றிய நிலையில், சந்தேகநபர் பொல்லால் தாக்கியதில் குறித்த நபர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இதையடுத்து காயமடைந்தவர் உடனடியாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

 

உயிரிழந்தவர் வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய 56 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button