பிரக்ஞானந்தாவின் வரலாற்று வெற்றி – முதல்வர் விஜய் பாராட்டு

Grand Chess Tour 2026 தொடரில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள இந்திய இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற Grand Chess Tour தொடரில் உலகின் முன்னணி வீரர்களுடன் போட்டியிட்ட பிரக்ஞானந்தா, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
இதன்மூலம் Grand Chess Tour தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளதாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
பிரக்ஞானந்தாவின் வெற்றி அவரது திறமை, மனஉறுதி மற்றும் தொடர்ச்சியான விடாமுயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது சாதனை இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பதுடன், தமிழ்நாடு மற்றும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த செஸ் வீரர்களுக்கு எதிராக அழுத்தமான சூழ்நிலைகளிலும் மதிநுட்பத்துடன் விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள பிரக்ஞானந்தா, எதிர்காலத்தில் உலக அரங்கில் மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.




