செம்மணி அகழாய்வில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழாய்வின் மூன்றாம் கட்டத்தின் 37ஆவது நாள் பணிகள் இன்று (19) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய அகழாய்வின்போது மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம், மூன்று கட்டங்களிலும் இதுவரை மொத்தம் 446 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 434 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 429ஆம் இலக்க மனித எலும்புக்கூடு கால்கள் மடக்கப்பட்ட அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாம் கட்ட அகழாய்விலும் இதேபோன்ற நிலையில் ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாறான அமைப்பில் கண்டறியப்படுவது இது இரண்டாவது சந்தர்ப்பமாகும்.




