செம்மணி மனித புதைகுழியில் மேலும் 12 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழாய்வுப் பணிகளின் போது இன்றையதினம் மேலும் 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 353 ஆக உயர்ந்துள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளின் 23ஆவது நாள் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், புதிதாக அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், இன்று மட்டும் 07 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அகழாய்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை மொத்தமாக 334 எலும்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களின் வயது, அடையாளம் மற்றும் பிற விவரங்களை உறுதிப்படுத்தும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
செம்மணி மனித புதைகுழி தொடர்பான அகழாய்வுகள் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் பல்துறை நிபுணர்களின் பங்கேற்புடன் நடைபெற்று வருவதுடன், இந்த கண்டுபிடிப்புகள் தொடர்பான மேலதிக ஆய்வுகளும் தொடர்கின்றன.





