AI நிறுவன ஆய்வாளர் திடீர் ராஜினாமா; மனிதகுலத்திற்கு எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், போதிய கட்டுப்பாடுகள் இல்லாமல் அதிக திறன் கொண்ட AI அமைப்புகளை உருவாக்குவதால் எதிர்காலத்தில் மனிதகுலத்திற்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என Anthropic நிறுவனத்தின் முன்னாள் ஆய்வாளர் ஜேகப் காக்சன் (Jacob Coxon) எச்சரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Anthropic, OpenAI உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் Superintelligence எனப்படும் மிகவும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான AI அமைப்புகள் அதிகளவு தன்னாட்சி மற்றும் திறன்களை பெற்றுக்கொள்ளும் பட்சத்தில், அவற்றை முறையாகக் கட்டுப்படுத்துவது எதிர்காலத்தில் சவாலாக மாறக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக இணைய அமைப்புகளை தாக்கும் அல்லது ஹேக் செய்யும் திறன் கொண்ட AI தொழில்நுட்பங்களின் வளர்ச்சி தொடர்பில் அவசரமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
AI தொழில்நுட்பம் மனித சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் நிலையில், அதன் வளர்ச்சியுடன் பாதுகாப்பு விதிமுறைகளும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதே அவரது முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
AI நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி கட்டுப்பாடுகள் இன்றி தொடர்ந்தால், எதிர்காலத்தில் அதன் தாக்கம் மிகவும் தீவிரமானதாக மாறக்கூடும் எனவும் ஜேகப் காக்சன் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் AI வளர்ச்சியின் விளைவாக மனிதகுலத்திற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கையும் வெளியாகியுள்ள நிலையில், Artificial Intelligence பாதுகாப்பு தொடர்பான உலகளாவிய விவாதம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.


