
வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலய மாணவன் யாதவ் 142 புள்ளிகளைப் பெற்று பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
யோகேஸ்வரன் மற்றும் பவித்ரா தம்பதியரின் செல்வப்புதல்வனான மாணவன் யாதவ், புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 142 புள்ளிகளைப் பெற்று சிறப்பான பெறுபேற்றை பதிவு செய்துள்ளார்.
மாணவனின் இந்த வெற்றிக்கு முழுமையான பங்களிப்பை வழங்கிய ஆசிரியை சசிகலாவுக்கு மாணவனும் அவரது பெற்றோரும் தங்களது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
மாணவன் யாதவின் இந்தச் சாதனை தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலயத்திற்கும், அவரது பெற்றோருக்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது.




