வவுனியாஇலங்கைசெய்திகள்வடக்கு மாகாணம்

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு

Desktop Image Mobile Image

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை விண்ணப்பம் தொடர்பான வழக்கு இன்று வவுனியா மேல்நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

முதல்வரின் பதவி நீக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடைக்கட்டளையை தொடர்ந்து நீடிப்பதா அல்லது அதனை நீக்குவதா என்பது தொடர்பில் கடந்த தவணையில் நீதிமன்றில் இருதரப்பினருக்கும் இடையே விரிவான விவாதம் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில், இருதரப்பு தரப்பினரும் தங்களது எழுத்துமூல சமர்ப்பணங்களை நீதிமன்றில் தாக்கல் செய்ய வேண்டும் என முந்தைய தவணையில் உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்காக கடந்த 28ஆம் திகதி வரை கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

மனுதாரர் தரப்பினால் கோரப்பட்டிருந்தபடி எழுத்துமூல சமர்ப்பணங்கள் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

எனினும், எதிர்மனுதாரர் தரப்பில் ஆஜரான அரச சட்டத்தரணி, தமது தரப்பின் எழுத்துமூல சமர்ப்பணங்களை சமர்ப்பிப்பதற்கு கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளார்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

அதனை ஏற்றுக்கொண்ட வவுனியா மேல்நீதிமன்றம், எதிர்மனுதாரர் தரப்பிற்கு மேலும் இரண்டு வார கால அவகாசத்தை வழங்கியுள்ளது.

அதேவேளை, வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீதான இடைக்காலத் தடைக்கட்டளையை இம்மாதம் 23ஆம் திகதி வரை நீடிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால், மாநகர முதல்வரின் பதவி நீக்கம் தொடர்பான விவகாரத்தில் தற்போதைய இடைக்கால நிலைமை எதிர்வரும் 23ஆம் திகதி வரை தொடரவுள்ளது.

இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் சட்டத்தரணி இ. தயாபரன் இன்று வவுனியா மேல்நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
AI நிறுவன ஆய்வாளர் திடீர் ராஜினாமா; மனிதகுலத்திற்கு எச்சரிக்கை! AI நிறுவன ஆய்வாளர் திடீர் ராஜினாமா; மனிதகுலத்திற்கு எச்சரிக்கை! யாழ் அராலியில் திடீரென பெருக்கெடுத்த கிணறுகள்; மக்கள் மத்தியில் ஆச்சரியம் யாழ் அராலியில் திடீரென பெருக்கெடுத்த கிணறுகள்; மக்கள் மத்தியில் ஆச்சரியம் தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு: திமுக உறுப்பினர்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றம் தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு: திமுக உறுப்பினர்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றம் யாழ்ப்பாணம், கண்டி, காலிக்கும் மெட்ரோ பேருந்து சேவை – அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல் யாழ்ப்பாணம், கண்டி, காலிக்கும் மெட்ரோ பேருந்து சேவை – அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல் 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள்களை மீளாய்வு செய்ய இன்று முதல் மேன்முறையீடு 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள்களை மீளாய்வு செய்ய இன்று முதல் மேன்முறையீடு தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலய மாணவன் யாதவ் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலய மாணவன் யாதவ் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவன் சாதனை: தமிழ்மொழியில் அகில இலங்கை முதலிடம் புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவன் சாதனை: தமிழ்மொழியில் அகில இலங்கை முதலிடம் இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: குசல் மெண்டிஸ் தலைமையில் 16 பேர் இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: குசல் மெண்டிஸ் தலைமையில் 16 பேர் சீனாவின் Fujian மாகாணத்தில் கனமழை: பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு சீனாவின் Fujian மாகாணத்தில் கனமழை: பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு கிளிநொச்சி ஏ9 வீதியில் கார் மோதி துவிச்சக்கர வண்டி சாரதி காயம் கிளிநொச்சி ஏ9 வீதியில் கார் மோதி துவிச்சக்கர வண்டி சாரதி காயம் AI நிறுவன ஆய்வாளர் திடீர் ராஜினாமா; மனிதகுலத்திற்கு எச்சரிக்கை! AI நிறுவன ஆய்வாளர் திடீர் ராஜினாமா; மனிதகுலத்திற்கு எச்சரிக்கை! யாழ் அராலியில் திடீரென பெருக்கெடுத்த கிணறுகள்; மக்கள் மத்தியில் ஆச்சரியம் யாழ் அராலியில் திடீரென பெருக்கெடுத்த கிணறுகள்; மக்கள் மத்தியில் ஆச்சரியம் தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு: திமுக உறுப்பினர்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றம் தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு: திமுக உறுப்பினர்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றம் யாழ்ப்பாணம், கண்டி, காலிக்கும் மெட்ரோ பேருந்து சேவை – அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல் யாழ்ப்பாணம், கண்டி, காலிக்கும் மெட்ரோ பேருந்து சேவை – அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல் 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள்களை மீளாய்வு செய்ய இன்று முதல் மேன்முறையீடு 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள்களை மீளாய்வு செய்ய இன்று முதல் மேன்முறையீடு தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலய மாணவன் யாதவ் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலய மாணவன் யாதவ் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவன் சாதனை: தமிழ்மொழியில் அகில இலங்கை முதலிடம் புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவன் சாதனை: தமிழ்மொழியில் அகில இலங்கை முதலிடம் இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: குசல் மெண்டிஸ் தலைமையில் 16 பேர் இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: குசல் மெண்டிஸ் தலைமையில் 16 பேர் சீனாவின் Fujian மாகாணத்தில் கனமழை: பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு சீனாவின் Fujian மாகாணத்தில் கனமழை: பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு கிளிநொச்சி ஏ9 வீதியில் கார் மோதி துவிச்சக்கர வண்டி சாரதி காயம் கிளிநொச்சி ஏ9 வீதியில் கார் மோதி துவிச்சக்கர வண்டி சாரதி காயம்