சிறுமி துஷ்பிரயோக வழக்கு: ஹேமரத்தன தேரருக்கு பிணை

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரரை, நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.
கம்பஹா பிரிவு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டிருந்த தேரர், இன்று அநுராதபுரம் தலைமை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்றம் தேரருக்கு தலா 05 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளையும், 100,000 ரூபாய் ரொக்கப் பிணையையும் விதித்துள்ளது.
மேலும், வெளிநாடுகளுக்கு செல்லுவதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பிணை நிபந்தனைகளை மீறினாலோ அல்லது சாட்சியாளர்களுக்கு செல்வாக்கு செலுத்த முயன்றாலோ பிணை ரத்து செய்யப்பட்டு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என நீதவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.




