இந்தியாவில் அதிர்ச்சி – ஒரே வாரத்தில் 60 குழந்தைகள் உயிரிழப்பு

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மால்டா அரச வைத்தியக் கல்லூரி வைத்தியசாலையில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வைத்தியசாலையில் ஒரே வாரத்தில் 60 புதிதாகப் பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், ஒரே நாளில் 10 குழந்தைகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மஞ்சள் காமாலை, சுவாசக் கோளாறு மற்றும் இதய நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக குழந்தைகள் உயிரிழந்ததாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ள இந்த உயிரிழப்புகள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலை ஏற்பட்டுள்ள நிலையில், சம்பவத்திற்கான உண்மையான காரணங்களை கண்டறிய விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணையை முன்னெடுக்க மேற்கு வங்க மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



