இலங்கை

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் காயம்

Desktop Image Mobile Image

தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியின் நாவுல, நாலந்த பகுதியில் இன்று இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி  விபத்துக்குள்ளானதில் 11 பேர்  காயமடைந்துள்ளனர்.

 

இன்று (26) காலை 9.20 மணியளவில் தனியார் பேருந்து ஒன்றும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச்  சொந்தமான பேருந்து ஒன்றும் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

 

விபத்தில் காயமடைந்த 11 பேர் நாலந்த பிரதேச வைத்தியசாலை மற்றும் மாத்தளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிகிச்சைக்காக…

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், கண்டி வீதி வழியாக கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சபாநாயகர், உடனடியாகச் செயற்பட்டு காயமடைந்தவர்களை பேருந்துகளில் இருந்து வெளியேற்றவும், அவர்களை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கவும் உதவி வழங்கியுள்ளார்.

 

 

சம்பவம் தொடர்பாக தனியார் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை போக்குவரத்துச் சபைப் பேருந்தின் சாரதி தப்பியோடியுள்ளார்.

 

விபத்து தொடர்பில் நாவுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button