இலங்கை

07 வயது சிறுமிக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; தப்ப முயன்ற இளைஞனுக்கு நடந்த சம்பவம்

Desktop Image Mobile Image

ஏழு வயதுச் சிறுமியைக் கடைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, மே மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மாதம்பே பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ராகல – லுணுகலை தோட்டத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

சந்தேகநபர் காக்கபள்ளிய – வாலஹேன பிரதேசத்தில் உள்ள தென்னை நார் மில் ஒன்றில் பணியாற்றி வருவதுடன், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரும் அதே மில்லில் பணியாற்றி வருபவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 24ஆம் திகதி மாலை, குறித்த சிறுமியையும் அவரது சகோதரனையும் கடைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி சந்தேகநபர் அழைத்துச் சென்றுள்ளார். எனினும், சிறிது நேரத்தின் பின்னர் சிறுவன் மட்டும் தனியாக வீடு திரும்பியுள்ளார்.

 

[<div class=”poptin-embedded” data-id=”361faa6e27950″></div>

 

இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் தாய், தனது மகளைத் தேடிச் சென்றுள்ளார். அப்போது, வீட்டின் அருகே உள்ள கால்வாய்க்குப் பக்கத்தில் சிறுமி  இருப்பதைக் கண்ட தாய், அது குறித்து விசாரித்துள்ளார்.

இதன்போது, சந்தேகநபர் தனக்கு இழைத்த அநீதி குறித்துச் சிறுமி தாயிடம் கூறியுள்ளார்.

 

 

சம்பவம் அம்பலமானதும் அங்கிருந்து தப்பியோட முயன்ற சந்தேகநபரை, அக்கம் பக்கத்தினர் பிடித்து மாதம்பே பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காகச் சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.

மாதம்பே பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button