உலக செய்திகள்செய்திகள்

கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம்: உயிரிழப்பு 1,556 ஆக உயர்வு

Desktop Image Mobile Image

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் எபோலா வைரஸ் பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,556 ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, இதுவரை 3,532 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான தொற்று நோய்களில் ஒன்றாகக் கருதப்படும் எபோலா வைரஸ், கொங்கோவின் பல பகுதிகளில் வேகமாக பரவி வருவதால் சுகாதாரத் துறையினர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

எனினும், நோய்த்தொற்றின் வேகமான பரவல் காரணமாக நிலைமையை முழுமையாக கட்டுப்படுத்துவதில் சவால்கள் நீடித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொற்று பரவலைத் தடுக்க நோயாளிகளை தனிமைப்படுத்துதல், தொடர்புடையவர்களை கண்காணித்தல் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

Back to top button