இலங்கைசெய்திகள்யாழ்ப்பாணம்வடக்கு மாகாணம்

ஊர்காவற்துறை அல்லைப்பிட்டியில் பதறவைத்த விபத்து – தலைகீழாக கவிழ்ந்த ‘பட்டா’ வாகனம்

Desktop Image Mobile Image

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை அல்லைப்பிட்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி உட்பட இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

ஊர்காவற்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் வர்த்தக நிறுவனமொன்றுக்குச் சொந்தமான ‘பட்டா’ ரக வாகனம், அல்லைப்பிட்டி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இதன்போது, வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த எல்லைக் கல்லுடன் வாகனம் பலமாக மோதியதில், நிலைகுலைந்த வாகனம் வீதியோரத்தில் தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, சாரதிக்கு ஏற்பட்ட திடீர் தூக்கக் கலக்கம் காரணமாகவே வாகனம் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் வாகனம் கடுமையாக சேதமடைந்த போதிலும், அதில் பயணித்த சாரதி உள்ளிட்ட இருவரும் சிறு காயங்களுடன் ஆபத்தின்றி உயிர் தப்பியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Back to top button