வவுனியாஇலங்கைவடக்கு மாகாணம்
வவுனியாவில் கோர விபத்து: முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழப்பு; மூவர் காயம்

வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மையில் இன்று (12) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
வவுனியாவிலிருந்து பயணித்த டிப்பர் வாகனம், சூடுவெந்தபிலவு பகுதியில் எதிர்திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோதல் மிகவும் பாரதூரமாக இடம்பெற்ற நிலையில், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, விபத்தில் காயமடைந்த மூவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை உலுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




