
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் வெப்பக் குறியீட்டு எண் 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொலன்னறுவை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 8.30 மணியளவிலேயே வெப்பநிலை 32 பாகை செல்சியஸைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையான காலப்பகுதியில் வெளியில் செல்வது ஆபத்தானதாக அமையக்கூடும் என வானிலை அதிகாரி சஜித் விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
எனவே, பிற்பகல் வேளைகளில் தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ளுமாறும், போதுமான அளவு தண்ணீர் அருந்துவதுடன் குளிர்ச்சியான இடங்களில் தங்கியிருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!




