இலங்கை

காலியில்-பேருந்து சுவரில் மோதி விபத்து – மூவர் காயம்

Desktop Image Mobile Image

காலி – கொழும்பு பிரதான வீதியின் தடல்ல பகுதியில் இன்று (04) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கி சுமார் 20 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்றே இந்த விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்து தடல்ல பகுதியை அடைந்தபோது, சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

 

இதன் காரணமாக பேருந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதுடன், பேருந்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button