இலங்கைசெய்திகள்

சட்டக் கல்வி பயின்று வந்த இளம் பெண் உயிரிழந்த நிலையில் மீட்பு

Desktop Image Mobile Image

பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்கனுவ வீதியில் அமைந்துள்ள வாடகை வீடு ஒன்றில், 26 வயதுடைய இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர், தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் சட்டப் பிரிவில் கல்வி பயின்று வந்த நதுனி சஹஸ்ரீ கூரே (26) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, அவர் குறித்த வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்ததுடன், தனது சட்டக் கல்வியைத் தொடர்ந்தபடியே சட்டத்தரணிகளின் அலுவலகப் பணிகளுக்கும் உதவியாகச் செயல்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

அவரது உயிரிழப்புக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. மரணம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் நீதிமருத்துவ பரிசோதனை மற்றும் மேலதிக விசாரணைகளின் பின்னரே தெளிவாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

இந்த சம்பவம் தொடர்பாக பாணந்துறை வடக்கு பொலிஸார் அனைத்து கோணங்களிலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button