
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புரவுன்சீக் தோட்டத்தில் இன்று (12) மதியம் இடம்பெற்ற சம்பவத்தில், தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 20 பெண் தோட்டத் தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல்களின்படி, புரவுன்சீக் தோட்டத்தின் ஒரு பிரிவில் தொழிலாளர்கள் வழக்கம்போல் தேயிலை கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் இருந்த குளவிக்கூடு கலைந்ததால் குளவிகள் கூட்டமாகத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 பெண்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




