இலங்கைசெய்திகள்

கடல் கொந்தளிப்பால் மீன்பிடி பாதிப்பு; மீன் விலை மீண்டும் உயர்வு

Desktop Image Mobile Image

நிலவும் கடல் கொந்தளிப்பு காரணமாக கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், நாட்டின் பல பகுதிகளில் மீன்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மோசமான கடல் நிலைமையால் மீன்பிடி நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதன் விளைவாக சந்தைகளுக்கு வரும் மீன்களின் வரத்து கணிசமாக குறைந்துள்ளதாக பேலியகொடை மத்திய மீன் சந்தை வளாகத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று (04) பேலியகொடை மத்திய மீன் சந்தையில் ஒரு கிலோகிராம் சலாயா மீன் ரூ.1,000, லின்னா ரூ.1,200, கெலவல்லா ரூ.1,600 மற்றும் தோரா மீன் ரூ.3,000 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

 

 

மேலும், மத்திய சந்தைக்கு மீன் வரத்து குறைவடைந்துள்ளதால், சில்லறை சந்தைகளிலும் மீன்களின் விலை கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடல் கொந்தளிப்பு நிலை தொடர்ந்தால், எதிர்வரும் நாட்களிலும் மீன்களின் விலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என சந்தை வட்டாரங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

Related Articles

Back to top button