
இந்திய திரையிசை உலகின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் இறுதிச்சடங்கு இன்று (12) அரசு மரியாதையுடன் நடைபெறவுள்ளது.
அவரது உடல் கர்நாடக மாநிலம் மைசூரிலுள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் அஞ்சலிக்குப் பின்னர், இன்று பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கனியனகுந்தி பகுதியில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படவுள்ளது.
88 வயதில் காலமான எஸ். ஜானகியின் மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது. பல்வேறு இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய அவர், பல தலைமுறை இசை ரசிகர்களின் மனதில் அழியாத இடத்தைப் பெற்றிருந்தார்.
அவரது மறைவையொட்டி அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.




