வவுனியாஇலங்கைவடக்கு மாகாணம்

வவுனியாவில் முதியவரிடம் பணம் பறிக்க முயற்சி; மர்மநபர் தப்பியோட்டம்-பொலிஸார் தீவிர விசாரணை

Desktop Image Mobile Image

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த மர்மநபர் ஒருவர், அங்கிருந்த முதியவரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவம் நேற்று (27.07.2026) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பகட்ட தகவல்களின்படி, முதியவரின் மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த சந்தர்ப்பத்தில், துவிச்சக்கரவண்டியில் வந்த மர்மநபர் கத்தியுடன் வீட்டிற்குள் நுழைந்து, ஒரு இலட்சம் ரூபாய் தருமாறு அச்சுறுத்தியுள்ளார்.

முதியவர் பணத்தை வழங்க மறுத்ததையடுத்து, அவரை தாக்கிவிட்டு சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தப்பியோடிய மர்மநபரை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

Back to top button