வவுனியாஇலங்கைவடக்கு மாகாணம்

போதைப்பொருளுக்கு எதிராக வவுனியாவில் விழிப்புணர்வு நடைபயணம்

Desktop Image Mobile Image

“எதிர்காலத்தை பறிக்கும் நச்சுப் போதைப்பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்துங்கள்” என்ற தொனிப்பொருளில் வவுனியாவில் விழிப்புணர்வு நடைபயணம் ஒன்று நடைபெற்றுள்ளது.

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் இந்த நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வவுனியா தேசிய இளைஞர் சேவை மன்ற மாவட்ட அலுவலகத்தில் ஆரம்பமான இந்த ஊர்வலம், பழைய பேருந்து நிலையப் பகுதி வரை சென்றடைந்தது.

 

 

நடைபயணத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள், போதைப்பொருள் பாவனைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

 

 

போதைப்பொருள் பயன்பாட்டை தவிர்த்து, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நிகழ்வின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button