லிபியாவில் மீண்டும் பதற்றம்: மின் நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

லிபியாவின் ஸாவியா நகரில் உள்ள முக்கிய மின் நிலையத்தை குறிவைத்து புதன்கிழமை அதிகாலை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதலைத் தொடர்ந்து மின் நிலைய வளாகத்தில் தீ ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஸாவியா நகரில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அப்பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எரிபொருள் சேமிப்பு தொட்டிகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
அவற்றில் ஒரு தாக்குதலின்போது சுமார் 45 இலட்சம் லீற்றர் பெட்ரோல் கொண்ட சேமிப்பு தொட்டி தீப்பற்றி, பின்னர் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக லிபியாவின் எரிபொருள் விநியோகம் மற்றும் மின் கட்டமைப்பில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
ஸாவியா நகரம் நாட்டின் முக்கிய எரிசக்தி மையங்களில் ஒன்றாக இருப்பதால், அங்கு இடம்பெறும் தாக்குதல்கள் லிபியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு புதிய சவாலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




