உலக செய்திகள்செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவிப்பு – அமெரிக்கா வான்வழித் தாக்குதல் தொடக்கம்

Desktop Image Mobile Image

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், ஹோர்முஸ் நீரிணையை மறு அறிவிப்பு வரும் வரை முழுமையாக மூடுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புடன், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே முன்னர் ஏற்பட்டிருந்த தற்காலிக போர்நிறுத்த நிலைமை மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

ஈரான் தரப்பின் தகவலின்படி, ஹோர்முஸ் நீரிணையில் அனுமதிக்கப்படாத மாற்றுப் பாதையில் பயணித்ததாகக் கூறப்படும் சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த வணிகச் சரக்குக் கப்பல் ஒன்றை நோக்கி எச்சரிக்கைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தலையீடுகள் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை ஹோர்முஸ் நீரிணை வழியாக எந்தவொரு வணிகக் கப்பலும் பயணிக்க அனுமதிக்கப்படாது என ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவின் பேரில் அமெரிக்க இராணுவம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானின் பந்தர் அப்பாஸ், கியூஎஸ்எம் தீவு மற்றும் சிரிக் ஆகிய கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள இராணுவத் தளங்கள் மற்றும் ஏவுகணைக் கிடங்குகள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச கடல் போக்குவரத்தை பாதிக்கும் வகையில் ஈரான் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு கடுமையான பதிலடி வழங்கப்படும் என அமெரிக்க பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகளவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் 20 சதவீதம் ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுவதால், இந்த முக்கிய கடல் வழித்தடம் மூடப்பட்டுள்ளமை உலக எரிசக்தி விநியோகத்திலும் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரக்கூடும் என்பதுடன், உலகளாவிய பணவீக்கமும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related Articles

Back to top button